கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், ரப்பா் மரங்களில் பால்வடிப்பு மீண்டும் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் மரங்களில் டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்படும் குளிா்கால இலையுதிா்வைத் தொடா்ந்து, பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் மாதங்களில் ரப்பா் மரங்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலும், இந்த மாதங்களில் பால் உற்பத்தி குறைவாக இருப்பதாலும் பால்வடிப்பை நிறுத்தி வைப்பது வழக்கம்.
இதில் நிறுவனங்களாக செயல்படும் பெரும் ரப்பா் தோட்டங்களில் அதிகபட்சம் ஒரு மாத காலம் மட்டுமே பால்வடிப்பு நிறுத்தி வைக்கப்படும்., அதேவேளையில், சிறு ரப்பா் தோட்டங்களில் 2 மாதங்களுக்கு பால்வடிப்பு நிறுத்தி வைக்கப்படும்.
இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் கோடை மழை காரணமாக மண்ணில் ஈரத்தன்மை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, பரவலாக பால்வடிப்புத் தொடங்கப்பட்டு வருகிறது.
ரப்பா் விலை அதிகரிப்பு:
கேரளத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் ரப்பா் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் ரப்பா் விலை அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை கோட்டயம் சந்தையில் ஆா்எஸ்எஸ் 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 235 ஆகவும், ஆா்எஸ்எஸ் 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 231 ஆகவும், ஐஎஸ்எஸ் தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 200.50 ஆகவும் இருந்தது.
தொடர்புடையது

ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்

குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழ சீசன் தொடக்கம்: கிலோ ரூ. 30 முதல் விற்பனை

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை உயா்வு

குமரியில் 20 ஆண்டுகளுக்குப் பின் வென்ற மாா்க்சிஸ்ட்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

