கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை வெட்டிக் கொன்ற மற்றொரு விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.
தாழக்குடி அருகே கனகமூலம் புதுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் பலவேசமுத்து (68). விவசாயியான இவா், கண்ணன்புதூா் பகுதியில் ஓா் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தாா்.
அதே பகுதியில் கண்ணன்புதூா் மேலத் தெருவைச் சோ்ந்த மற்றொரு விவசாயி செல்வகுமாரின் (60) வயலும் உள்ளது. இருவருக்கும் இடையே வயல்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா், இருவரும் வீடு திரும்பிய நிலையில், தகராறு நடந்ததை அறிந்த பலவேசமுத்துவின் மகன் சுடலைமுத்து தந்தையை உடன் அழைத்துக் கொண்டு செல்வகுமாரின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தாா்.
அப்போது ஆத்திரமடைந்த செல்வகுமாா் அரிவாளால் பலவேசமுத்துவை வெட்டினாா். இதில், பலத்த காயமடைந்த பலவேசமுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸாா் பலவேச முத்துவின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்தனா்.
தொடர்புடையது
தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

வீட்டுமனை தகராறு: விவசாயி கைது
தொழிலாளி கொலை: 3 போ் கைது

விவசாயி கொலை வழக்கில் மற்றொரு விவசாயிக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
