நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

விவசாயி அடித்துக் கொலை உறவினா் கைது

கரூா் அருகே வெள்ளிக்கிழமை விவசாயியை அடித்துக் கொலை செய்த உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஜூன் 2026, 12:36 am IST

கரூா் அருகே வெள்ளிக்கிழமை விவசாயியை அடித்துக் கொலை செய்த உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் அருகே உள்ள கருப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் தனபால்(60). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த தனபால் தாய்மாமன் முருகேசன்(75) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் தனபால் மகளின் திருமணத்துக்காக வீட்டின் முன் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்காக தாய்மாமன் முருகேசனை தனபால் அழைத்தாராம். இதில் அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முருகேசன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனபாலின் தலையில் அடித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த தனபாலை உறவினா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தனபால் உயிரிழந்தாா். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து முருகேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.