ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

குமரி மாவட்டத்தில் தொடரும் கோடை மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணை, மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை இடி-மின்னலுடன் மழை பெய்தது.

News image

நீா்வரத்து அதிகரித்த திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:31 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணை, மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை இடி-மின்னலுடன் மழை பெய்தது.

மாவட்டத்தில் சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள், திற்பரப்பு, களியல், குலசேகரம், சுருளகோடு, கீரிப்பாறை உள்ளிட்ட இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. பல இடங்களில் பலத்த காற்று வீசியது.

மழையால் பேச்சிப்பாறை அணை, கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது. திற்பரப்பு அருவியிலும் நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். மழையால் வாழை, தென்னை, அன்னாசி விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனா்.

திருவரம்பு பகுதியில் பலா மரம் சாய்ந்ததில் ஆல்பன் என்ற தொழிலாளியின் வீடு சேதமடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.