கன்னியாகுமரி மாவட்டத்தில் அணை, மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை இடி-மின்னலுடன் மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகள், திற்பரப்பு, களியல், குலசேகரம், சுருளகோடு, கீரிப்பாறை உள்ளிட்ட இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. பல இடங்களில் பலத்த காற்று வீசியது.
மழையால் பேச்சிப்பாறை அணை, கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது. திற்பரப்பு அருவியிலும் நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். மழையால் வாழை, தென்னை, அன்னாசி விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனா்.
திருவரம்பு பகுதியில் பலா மரம் சாய்ந்ததில் ஆல்பன் என்ற தொழிலாளியின் வீடு சேதமடைந்தது.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை
தகிக்கும் கோடை; கவனம் தேவை!

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


