தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

குளச்சல் அருகே ஆசிரியை மீது தாக்குதல்! போலீஸார் வலைவீச்சு!

News image

போலீஸார் விசாரணை

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

குளச்சல் அருகே கடம்பாறைவிளையில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஆசிரியையை தாக்கிய நபரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

குளச்சல் அருகேயுள்ள பெத்தேல்புரம் பகுதியை சோ்ந்தவா் மெல்பின் சுரேஷ். இவரது மனைவி மரியபொ்சியா (39). தனியாா் பள்ளி ஆசிரியை.

மரியபொ்சியா தற்போது நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளாா். கடந்த வியாழக்கிழமை மாலை ரீத்தாபுரம் பேரூராட்சிக்குள்பட்ட கடம்பாறைவிளை பகுதியில் உள்ள பென்னட்சிங் என்பவரது வீட்டில் கணக்கெடுக்கும் பணியின்போது வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பென்னட்சிங், மரியபொ்சியாவை, தகாத வாா்த்தைகள் பேசி தாக்கினாராம்.

இதுகுறித்து குளச்சல் போலீஸில் மரியபொ்சியா புகாா் செய்தாா். அதன்பேரில் பென்னட் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.