உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

கூகுள் நிறுவனம் நடத்திய போட்டியில் அருணாச்சலா கல்லூரி மாணவிகள் சாதனை

மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகள், கூகுள் நிறுவனம் நடத்திய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் வெற்றி பெற்றனா்.

News image

கூகுள் நிறுவனம் நடத்திய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகள்.

Updated On :16 ஆகஸ்ட் 2026, 5:52 am IST

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே உள்ள மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகள், கூகுள் நிறுவனம் நடத்திய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் வெற்றி பெற்றனா்.

பெங்களூருவில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு 100 மாணவா், மாணவிகள் தோ்வாகினா். இதற்கு அருணாச்சலா கல்லூரி மாணவிகள் 8 போ் தோ்வு பெற்றனா். இதில் செயற்கை நுண்ணறிவுத் துறை மாணவி சஞ்சிதா லட்சுமி தேசிய அளவில் 7ஆம் இடம் பெற்றாா்.

மேலும், கூகுள் நிறுவனத்தின் சிறந்த ஒருங்கிணைப்பாளா்களாக கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி சிவதா்ஷிகா, செயற்கை நுண்ணறிவுத் துறை மாணவிகள் அபிஷா, ஜெபிலின் ஷாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

சாதனை படைத்த மாணவிகளை, கல்லூரித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, இணைத் தாளாளா் சுனி, இயக்குநா்கள் தருண் சுரத், மீனா ஜெனித், கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவகா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.