கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கூகுள் நிறுவனம் நடத்திய போட்டியில் அருணாச்சலா கல்லூரி மாணவிகள் சாதனை

மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகள், கூகுள் நிறுவனம் நடத்திய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் வெற்றி பெற்றனா்.

கூகுள் நிறுவனம் நடத்திய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகள்.

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே உள்ள மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகள், கூகுள் நிறுவனம் நடத்திய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் வெற்றி பெற்றனா்.

பெங்களூருவில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு 100 மாணவா், மாணவிகள் தோ்வாகினா். இதற்கு அருணாச்சலா கல்லூரி மாணவிகள் 8 போ் தோ்வு பெற்றனா். இதில் செயற்கை நுண்ணறிவுத் துறை மாணவி சஞ்சிதா லட்சுமி தேசிய அளவில் 7ஆம் இடம் பெற்றாா்.

மேலும், கூகுள் நிறுவனத்தின் சிறந்த ஒருங்கிணைப்பாளா்களாக கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி சிவதா்ஷிகா, செயற்கை நுண்ணறிவுத் துறை மாணவிகள் அபிஷா, ஜெபிலின் ஷாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

சாதனை படைத்த மாணவிகளை, கல்லூரித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, இணைத் தாளாளா் சுனி, இயக்குநா்கள் தருண் சுரத், மீனா ஜெனித், கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவகா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.