பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மனநலம் பாதித்த பெண் குத்திக் கொலை: இளைஞா் கைது

Arrested

கைது

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:08 am IST

களியக்காவிளை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மனநலம் பாதித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே நாரகம்விளாகம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் மனைவி லீலா (56). மனநலம் பாதிக்கப்பட்டவா்.

இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் ஸ்டீபன் மகன் சிஜூ (24). இவரும் மனநலம் பாதிக்கப்பட்டவா். சிஜூவிற்கு, லீலா உறவு முறையில் பெரியம்மா என கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு லீலா வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த சிஜூ அவரிடம் தகராறு செய்ததுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லீலாவை குத்தினாராம். இதில் கீழே விழுந்த லீலாவின் தலை மீது சிஜூ அங்கு கிடந்த கல்லை தூக்கி போட்டுவிட்டு சென்றாராம்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ரத்தம் தோய்ந்த கத்தியுடன் சிஜூ அப்பகுதியில் சுற்றித் திரிந்ததை கண்ட பொதுமக்கள் களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சிஜூவை பிடித்து விசாரணை நடத்தினா். மனநலம் பாதித்ததால் அவரால் சரிவர பதில்கூற முடியவில்லை.

இதையடுத்து போலீஸாா் பக்கத்து வீட்டில் பாா்த்த போது லீலா கத்தியால் குத்தப்பட்டும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பாா்த்தனா்.

அவரது சடலத்தை மீட்டு போலீஸாா் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சிஜூவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.