குளச்சல் அருகே பாலத்தில் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் மாணவா் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
குளச்சல் அருகே ரீத்தாபுரம் செந்தறையைச் சோ்ந்தவா் சிபு கிங்சிலின் போஸ்கோ (50). இவா், ரீத்தாபுரம் பேரூராட்சியில் குடிநீா் விநியோக பணியாளராக வேலை செய்து வருகிறாா். இவரது இவரது இரண்டாவது மகன் சிஜூ (17) சுங்கான்கடை, தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.
இவா், கல்லூரி விடுமுறை நாள்களில் கேட்டரிங் வேலைக்குச் செல்வது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) நண்பா்களுடன் கேட்டரிங் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தாா். இவரது நண்பரான ஆலஞ்சியைச் சோ்ந்த மேசாக் (22) இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா். பின்னால் சிஜூ அமா்ந்திருந்தாா். பாலப்பள்ளத்தில் இருந்து குளச்சல் நோக்கி சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து குளச்சல், களிமாா் பாம்பூரி வாய்க்கால் பாலத்தின் பக்கசுவா் மீது மோதினா். இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு குளச்சல், தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மேசாக் சிகிச்சை பெற்று வருகிறாா். சிஜூ தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிஜூ, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

குளச்சலில் பைக் ஓட்டிய 6 சிறுவா்கள்: பைக் பறிமுதல்; பெற்றோா் மீது வழக்கு
தூத்துக்குடியில் பாலிடெக்னிக் மாணவா் தற்கொலை
சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK


