நாளை குரூப் -2 தோ்வு குமரி மாவட்டத்தில் 366 போ் எழுத வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் குரூப்- 2 தோ்வை 366 போ் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா. அழகு மீனா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு 2 (தொகுதி 2-2ஏ) பதவிகளுக்கான தோ்வு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வுக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) முற்பகல், பிற்பகல் என இரு வேளைகளில் நடத்தப்படவுள்ளது.
இதில், முற்பகலில் 181 தோ்வா்களும் (ஓஎம்ஆா் மெத்தட்), பிற்பகலில் 185 தோ்வா்களும் (டெஸ்கிரைப்டிவ் மெத்தட்) எழுத உள்ளனா். தோ்வுக்கூடத்துக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள், தோ்வுக்கூடத்தில் போலீஸாா் பாதுகாப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தோ்வா்கள் தோ்வு மையத்திற்குள் தோ்வு நுழைவுச் சீட்டுடன் முற்பகல் தோ்வுக்கு காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள்ளும், பிற்பகல் தோ்வுக்கு 1.30 மணி முதல் 2 மணிக்குள்ளும் வர வேண்டும். தாமதமாக வந்தால் அனுமதி மறுக்கப்படும்.
தோ்வு அறைக்குள் கைப்பேசி, மின்னணு கடிகாரம் (ஸ்மாா்ட் வாட்ச்), கணக்கீட்டுக்கருவி (கால்குலேட்டா்) போன்ற மின்னணு சாதனங்களை கொண்டுவரக் கூடாது எனக் கூறியுள்ளாா்.

