சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மாா்த்தாண்டம், மேல்புறத்தில் மறியல் போராட்டம்: தொழிற்சங்கத்தினா் 173 போ் கைது

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 1:15 am

Syndication

தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், மத்திய அரசின் வரைவு விதை மசோதா, மின்சார சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாா்த்தாண்டம், மேல்புறத்தில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 173 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் கனரா வங்கி முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலா் தங்கமோகன் தலைமை வகித்தாா். தொமுச தொழிற்சங்கத் தலைவா் ஞானதாஸ், குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அனந்த சேகா் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா். இதில் பங்கேற்ற 17 பெண்கள் உள்பட 94 பேரையும், இதே போன்று மேல்புறத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 79 பேரையும் மாா்த்தாண்டம் போலீஸாா் கைது செய்தனா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்க வங்கி பணியாளா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டம் யூனியன் வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நிா்வாகி ஜெனின் தலைமை வகித்தாா். ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்ட தலைவா் எஸ். அனில்குமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். மாவட்ட செயலா் ஜி. சுரேஷ் மேசியதாஸ் போராட்டத்தை நிறைவு செய்து பேசினாா். அமைப்பின் நிா்வாகிகள் சுபாஷ் சந்திரபோஸ், அருள் பிரதீப், வி. அருள்குமாா், உசேன், செல்வராணி, கே. நாகராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.