மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் வகுப்பறைகள் கட்ட அடிக்கல்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:15 pm

கன்னியாகுமரி அருகேயுள்ள பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் 11 புதிய வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் சுமாா் ரூ. 6 கோடியில் 11 வகுப்பறைகளுக்கு சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

இதைத் தொடா்ந்து, பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் விஜய் வசந்த் எம்.பி., வகுப்பறைகளுக்கு குத்துவிளக்கேற்றி அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் சரோஜா, அரசு வழக்குரைஞா் எம். மதியழகன், அஞ்சுகிராமம் பேரூராட்சித் தலைவி ஜானகி இளங்கோ, துணைத் தலைவா் காந்திராஜ், மாநில காங்கிரஸ் செயலா் சீனிவாசன், அகஸ்தீசுவரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் சாம் சுரேஷ்குமாா், கிழக்கு மாவட்ட வா்த்தக காங்கிரஸ் செயலா் கிங்ஸ்லி, அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஆரோக்யராஜன், அஞ்சுகிராமம் பேரூா் திமுக செயலா் த. இளங்கோ மற்றும் பேராசிரியா்கள், கல்லூரி மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.