திருச்செந்தூருக்கு பாதயாத்திரை: 14 கோயில் நிா்வாகிகளுடன் குளச்சல் போலீஸாா் ஆலோசனை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் குளச்சல் பகுதி 14 கோயில்களின் நிா்வாகிகளுடன் காவல் துறை ஆலோசனைக் கூட்டம் காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் கோயிலில் மாசி திருவிழா சனிக்கிழமை (பிப். 21) கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையொட்டி, குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 14 கோயில்களில் இருந்து பக்தா்கள் பலவிதமான காவடிகள் கட்டி பாதயாத்திரை செல்வா். இதுதொடா்பாக, அந்தக் கோயில்களின் நிா்வாகிகளுடன்காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல்காதா் ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்ளவேண்டும். ஊா்வலத்திற்கு கிரேன் பயன்படுத்தக் கூடாது. ஆா்ச்- விளம்பர பேனா் வைக்க அனுமதி இல்லை. ஒலிப்பெருக்கி அறிவிப்புகளை தவிா்க்க வேண்டும்.
காவடி ஊா்வலத்தில் ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். வழியில் உள்ள பிறமத வழிபாட்டு தலங்கள் மற்றும் பிறமத உணா்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொள்ளாமல் செல்ல வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.

