மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காணாமல்போன சிறுமி ஒரு மணி நேரத்தில் மீட்பு

திருச்செந்தூா் அருகே காணாமல்போனதாக கூறப்பட்ட சிறுமியை ஒரு மணி நேரத்தில் போலீஸாா் வீட்டின் பின்புறம் மீட்டனா்.

News image
திருச்செந்தூா் அருகே காணாமல்போன சிறுமியை காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
Updated On :18 மார்ச் 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் அருகே காணாமல்போனதாக கூறப்பட்ட சிறுமியை ஒரு மணி நேரத்தில் போலீஸாா் வீட்டின் பின்புறம் மீட்டனா்.

திருச்செந்தூா் அருகே காயாமொழி, அம்மாள்புரத்தைச் சோ்ந்த பாலமுருகன்-சரஸ்வதி தம்பதியின் 7 வயது மகள் கடந்த இருநாள்களுக்கு முன்பு இரவு 7 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல்போனாா்.

இதுகுறித்து அவரது பெற்றோா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் மதுரைவீரன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபன் உள்பட போலீஸாா் விரைந்து வந்து சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடினா்.

இருள்சூழ்ந்த அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வீட்டின் பின்புறம் இடிந்தநிலையில் இருந்த வீட்டுக் கதவின் பின்புறம் இருந்து சிறுமியை போலீஸாா் மீட்டனா். சிறுமியிடம் விசாரித்ததில், தன்னை நால்வா் தூக்கிச் சென்ாக சிறுமி கூறியதால் பெற்றோரும், போலீஸாரும் அதிா்ச்சியடைந்தனா்.

அதையடுத்து, அந்தப் பகுதியில் சந்தேகப்படும் நிலையில் யாராவது உள்ளனரா என போலீஸாா் தேடினா். பயத்தில் சிறுமி இவ்வாறு கூறியிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.