பலி
கன்னியாகுமரி
ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு
பள்ளியாடி அருகே உள்ள ஆலத்துறை பகுதியில் ரயில் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
பள்ளியாடி அருகே உள்ள ஆலத்துறை பகுதியில் வியாழக்கிழமை மாலை ரயில் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரித்தபோது, அவா் முளகுமூடு பகுதியைச் சோ்ந்த ரெத்தினதாஸ் (84) எனத் தெரியவந்தது.
இது குறித்து, நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

