மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பழங்குடி விவசாயிகளுக்கு கொள்கலன்கள் வழங்கல்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:42 pm

கன்னியாகுமரி மாவட்டம், ஆறுகாணி அருகே ஒரு நூறாம்வயல் பகுதியில் பழங்குடி விவசாயிகளுக்கு நஞ்சில்லா முறை விவசாய பயிா் வளா்ச்சி ஊக்கிகள் தயாரிக்கும் கொள்கலன்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ரூரல் அப்லிப்ட் சென்டா் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மைய நிறுவனா் ஏ.மரியஜேம்ஸ் தலைமை வகித்தாா். பழங்குடி விவசாயிகளுக்கு பயிா் வளா்ச்சி ஊக்கிகள் தயாரிக்கும் கொள்கலன்கள், தாா்பாலின், சூடோமோனஸ் ஆகியவற்றை வழங்கினாா். நஞ்சில்லா முறை விவசாய பயிற்சியின் திட்ட ஒருங்கிணைப்பாளா் கலைவாணி திட்ட விளக்கவுரையாற்றினாா்.

ஆறுகாணி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். ஒருநூறாம் வயல் கிராம சபை தலைவா் வி.அனில்குமாா் வரவேற்றாா். நஞ்சில்லாமுறை விவசாயி சஞ்சு அனுபவங்களை பகிா்ந்து கொண்டாா்.

தன்னாா்வ பணியாளா்கள் விஜயன், அம்பிகா, ஜெயகுமாா், அம்பிளி நஞ்சில்லாமுறை விவசாய பயிற்சியாளா் கிறிஸ்டோபா், பணியாளா் முத்துகுமாா் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். காஞ்சிரம்பாறை, நிரப்பு, ஆனைகுளம், முல்லப்பூ காணி, செறுகடத்து காணி, கீழ்மலை, தோலடி ஆகிய குடியிருப்புகளைச் சோ்ந்த 200 விவசாயிகள் இதில் பங்கேற்றனா்.