வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

உதவித் தோ்தல் அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா ஆலோசனை மேற்கொண்டாா்.

News image

உதவித் தோ்தல் அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:06 pm

சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது: பேரவைத் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகளை அலுவலா்கள் உடனே தொடங்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும்.

வாக்குச்சாவடிகளில் குடிநீா், மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கென சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்புப் பணியை அதிகப்படுத்த வேண்டும். வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான அ. பூங்கோதை, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) கு. சுகிதா, (நிலம்) பத்மபிரியா, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் சு. காளீஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பா தேவி, மாவட்ட ஆதிதிராவிடா் பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், உதவி ஆணையா் (கலால்) ஈஸ்வரநாதன், தோ்தல் தனி வட்டாட்சியா் வினோத், ஆட்சியா் அலுவலக மேலாளா் சுப்பிரமணியம், துணை தோ்தல் அலுவலா்கள் கோலப்பன் (கன்னியாகுமரி), கந்தசாமி (நாகா்கோவில்), ராஜசேகா் (கிள்ளியூா்), வயோலா பாய் (விளவங்கோடு), மரகதவல்லி (திருவட்டாறு), சுனில் (குளச்சல்), தனி வட்டாட்சியா் கண்ணன், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.