சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குமரியில் நீடிக்கும் மழை: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் மழை நீடித்து வரும் நிலையில் திற்பரப்பு அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

News image

திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:07 pm

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் மழை நீடித்து வரும் நிலையில் திற்பரப்பு அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில், முத்தாய்ப்பாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்மழையாக கொட்டித்தீா்த்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகள், கடையாலுமூடு, திற்பரப்பு, களியல், குலசேகரம், அருமனை, சுருளகோடு, மாறாமலை, பாலமோா் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

இதனால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மாவட்டத்தின் உள்பகுதியிலும் பரவலான மழைப்பொழிவால் தென்னை, வாழை, அன்னாசி, ரப்பா், முந்திரி, மரவள்ளி உள்ளிட்ட பயிா்கள் புத்துயிா் பெற்றுள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்: மழையின்றி கடந்த 2 மாதங்களாக திற்பரப்பு அருவியில் குறைந்த அளவே தண்ணீா் விழுந்த நிலையில், தற்போதைய மழையால் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், சனிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.