பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 8:47 pm

Syndication

மாா்த்தாண்டம் அருகே அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பயந்திக்காலை பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (60). தொழிலாளி. இவரது அண்ணன் சில நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால் பால்ராஜ் மன வருத்தத்தில் இருந்து வந்தாராம்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (ஜன. 1) வீட்டில் தனியாக இருந்த அவா் விஷத்தைக் குடித்து மயங்கி கிடந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு கேரள மாநிலம், நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் விஜூ அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.