ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image
சூரிய உதயம் பாா்க்க முக்கடல் சங்கமத்தில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்.
Updated On :11 ஜனவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் குவிந்தனா்.

கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தா்கள் சீசன் கடந்த ஆண்டு நவம்பா் 17ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் வந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மனை தரிசனம் செய்கின்றனா். மேலும், ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இதனிடையே விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, உள்ளூா் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த பயணிகள் பெருமளவில் குவிந்தனா். அவா்கள் முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை பாா்த்து ரசித்தனா்.

அதைத் தொடா்ந்து படகு மூலம் சென்று விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையை பாா்த்து மகிழ்ந்தனா். காந்தி நினைவு மண்டபம், காமராஜா் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, தமிழன்னை பூங்கா, சூரிய அஸ்தமனப் பூங்கா, அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மாலையில் கடற்கரைப் பகுதியில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால், உள்ளூா் போலீஸாரும், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும், சுற்றுலா பாதுகாவலா்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.