மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வட மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே தனியாா் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்துவந்த வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:09 pm

Syndication

களியக்காவிளை: பளுகல் அருகே தனியாா் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்துவந்த வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பளுகல் அருகே செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்த 27 போ் பணியாற்றி வருகின்றனா். இதில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சுனில் சந்தீப் (26) வேலை செய்து வந்தாா். அவருக்கு 2 நாள்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மேல்பாலை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாராம்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக காரக்கோணம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நிறுவன மேலாளா் விஷ்ணு அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.