விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 7:00 pm

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

குழித்துறை அருகேயுள்ள கல்லுக்கெட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரெத்தினசுவாமி மகன் ஜெகன் (36). புதுக்கடையில் உள்ள நிறுவனத்தில் நகை விற்பனையாளராக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த ஜெகன், ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றவா், அதன் பின்னா் வீட்டு திரும்பவில்லையாம்.

இந்நிலையில் மடிச்சல் பகுதியில் உள்ள குளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரது பெற்றோா் சென்று பாா்த்த போது, அது ஜெகனின் சடலம் என்பதை அடையாளம் காட்டினா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். மேலும், ஜெகன் மது அருந்திய நிலையில் குளத்தில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.