வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

குமரி மாவட்டத்தில் ஜன.26 இல் 95 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும், திங்கள்கிழமை (ஜன.26) கிராமசபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

Updated On :21 ஜனவரி 2026, 7:04 pm

குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும், திங்கள்கிழமை (ஜன.26) கிராமசபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குடியரசு தினமான ஜன. 26 ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டத்தை ஊராட்சிகளின் எல்லைக்கு உள்பட்ட வாா்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணியளவில் நடத்தவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு உறுப்பினா்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராமசபைக் கூட்டம் நடத்தவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது.

அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களைஅளிக்கவும் அனைத்துத் துறைகளின் அலுவலா்களும் இந்தக் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்.

எனவே, பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.