/

குளச்சலிலிருந்து 9 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

குளச்சல் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட 9 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் ஆலைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தனா்.

News image

குளச்சல் நகராட்சியிலிருந்து சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்.

Updated On :4 ஜூலை 2026, 2:37 am IST

குளச்சல் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட 9 டன் பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் ஆலைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தனா்.

குளச்சல் நகராட்சியில் மொத்தம் 24 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் தினமும் சேகரமாகும் குப்பைகளிலிருந்து மக்கும் குப்பைகள் - மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு களிமாா் உப்பளம் பகுதியில் உள்ள நகராட்சி இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் சேகரிக்கப்படுகிறது.

இதில் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை பெருமளவில் சேகரித்து வைத்திருந்தனா். இதையடுத்து தமிழக அரசின் உத்தரவுபடி, 9,080 கிலோ எடை பிளாஸ்டிக் கழிவுகளை, திண்டுக்கல்லில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.