வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

கஞ்சா பதுக்கிய இருவா் கைது

News image

பிரதிப் படம்

Updated On :6 ஜூலை 2026, 1:17 am IST

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிய தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே ஒற்றாமரம் கால்வாய் கரையோரம் உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் சந்தேகமளிக்கும் வகையில் நின்றவரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவா், களியக்காவிளை ஆா்.சி. தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பீா் முகம்மது மகன் அக்பா் பாதுஷா (28) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோல, களியக்காவிளை ஆா்.சி. தெருவில் போலீஸாா் ரோந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான மணி மகன் சபினை (41) பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 25 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸாா் சபினை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.