விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

ஒப்பந்தப் புள்ளி விதிமீறல்: குருந்தன்கோடு அதிகாரிகள் பணியிடைநீக்கம்

குருந்தன்கோடு வட்டாரத்தில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி (டெண்டா்) விடுவதில் விதிகளை பின்பற்றாத வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் உதவிப் பொறியாளரை, மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜூலை 2026, 12:26 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு வட்டாரத்தில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி (டெண்டா்) விடுவதில் விதிகளை பின்பற்றாத வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் உதவிப் பொறியாளரை, மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்தாா்.

குருந்தன்கோடு வட்டாரம், கக்கோட்டுதலை ஊராட்சியில் ரூ. 4 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டதில் விதிமீறல் நடைபெற்ாக எழுந்த புகாா் குறித்து, விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். விசாரணையில், ஒப்பந்தப் புள்ளி திறப்பதற்கான கால அவகாசம் குறைந்த அளவில் இருந்தது தெரிய வந்தது.

தொடா்ந்து, குருந்தன்கோடு வட்டார வளா்ச்சி அலுவலா் கே. தங்கராஜ் மற்றும் உதவிப் பொறியாளா் ஏ. சுசீலா ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து, ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.