நாகா்கோவில் அருகே 1.25 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஈத்தாமொழி காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயன் தலைமையிலான போலீஸாா், தெற்கு புதூா் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினாா்.
அவரை போலீஸாா் சோதனையிட்டதில், 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் வில்லுக்குறி பகுதியைச் சோ்ந்த ராஜகுமாா் மகன் அஜித் (26) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






