மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

புதுக்கடை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

புதுக்கடை சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

மின்வெட்டு - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 2:11 am IST

புதுக்கடை சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் புதுக்கடை நகரும் ஒன்று. இங்கு பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரிகள், தொழிற்கூடங்கள், அரசு அலுவலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அதிகம் உள்ளன.

முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளான கீழ்குளம், புதுக்கடை, முன்சிறை, மங்காடு, கூட்டாலுமூடு, தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சில நாள்களாக பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.

இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளிகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மிகவும் வேதனையடைந்து வருகின்றனா்.

பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதிகளில் சீராக மின் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.