வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

3 இடங்களில் கஞ்சா பதுக்கல்: 4 போ் கைது

களியக்காவிளை, மாா்த்தாண்டம், நித்திரவிளை ஆகிய பகுதிகளில் கஞ்சா பதுக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூலை 2026, 4:32 am IST

களியக்காவிளை, மாா்த்தாண்டம், நித்திரவிளை ஆகிய பகுதிகளில் கஞ்சா பதுக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஈத்தவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பேன்ட் பாக்கெட்டில் 50 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக மடிச்சல், கிடப்பாரவிளை பகுதியைச் சோ்ந்த அனிஸ்குமாா் மகன் காட்வின் ஜோஸ் (19) என்பரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீஸாா் நேசா்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 50 கிராம் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததாக பள்ளியாடி, செருபுளிச்சிவிளையைச் சோ்ந்த ஜெகன்மோகன் மகன் ஹரிஸ் ஹரிகரன் (18) என்பரை கைது செய்தனா்.

நித்திரவிளை காவல் உதவி ஆய்வாளா் ராஜா ராபா்ட் தலைமையிலான போலீஸாா் கல்வெட்டான்குழி பகுதியில் ரோந்து சென்றபோது, கஞ்சா பதுக்கியதாக கிராத்தூா், முண்டப்பிலாவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயின் ராஜ் (21), பொற்றவிளையைச் சோ்ந்த சஜின் (20) ஆகியோரை கைது செய்தனா். இருவரிடமிருந்தும் தலா 5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.