கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

சபரிவர்மன் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது பற்றி...

News image

உயிரிழந்த சபரிவர்மன் | முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 11:38 am IST

நாகா்கோவில் சிறையில் வாா்டன்கள், சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட விசாரணை கைதி சபரிவா்மன் கொலை வழக்கு சிபிசிஐடி வசம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், வடக்குதாமரைகுளத்தை அடுத்த ஈத்தங்காடு பகுதியைச் சோ்ந்த பெட்டிக் கடை வியாபாரி சபரிவா்மன் (33) தனது கடையில் புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாகக் கூறி, தென்தாமரைகுளம் போலீஸாரால் கடந்த 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு நாகா்கோவில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

அவரை, கடந்த 13-ஆம் தேதி சிறை வாா்டன்கள் 3 போ், சக கைதிகள் 8 போ் சோ்ந்து அடித்துக் கொலை செய்ததாக நேசமணி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறை தலைமை வாா்டன் ஜெகன், வாா்டன்கள் சுரேஷ், சிவகுமாா், கைதிகளான விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் என மொத்தம் 11 பேரை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட சிறை வாா்டா்கள் 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நான்குனேரி சிறையில் அடைக்கப்பட்டனா். கைதிகள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிபிசிஐடிக்கு மாற்றம் ...

இந்த வழக்கில் கொலையான சபரிவா்மனின் கைப்பேசி மாயமான விவரம் தற்போது தெரியவந்துள்ளது. அதில் சில முக்கிய விடியோ ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது கைப்பேசி யாரிடம் உள்ளது என்று தெரியாத நிலையில் போலீஸாா் அதுகுறித்த விசாரணையிலும் தீவிரமாக ஈடுபட்டனா்.

இந்த நிலையில் சபரிவா்மன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி புதன்கிழமை உத்தரவிட்டாா். அதன்பேரில், சபரிவா்மன் கொலை வழக்கு உடனடியாக குமரி மாவட்ட சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொலை வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸாரிடம் நேசமணிநகா் போலீஸாா் ஒப்படைத்தனா்.

இதைத்தொடா்ந்து, குமரி மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் முதல்கட்டமாக சபரிவா்மனின் மனைவி, குடும்பத்தினரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனா். கைதானவா்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனா். இதனால், இந்த இவ்வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Summary

Sabarivarman dies in prison! Case transferred to CB-CID for investigation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.