வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பாறைப்பொடி கடத்த முயற்சி: 3 மினி லாரிகள் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே உரிய அனுமதி இன்றி கேரளத்துக்கு பாறைப்பொடி (எம். சான்ட்) கடத்திச் செல்ல முயன்ற 3 மினி லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

மினி லாரிகள் - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 4:42 am IST

கொல்லங்கோடு அருகே உரிய அனுமதி இன்றி கேரளத்துக்கு பாறைப்பொடி (எம். சான்ட்) கடத்திச் செல்ல முயன்ற 3 மினி லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபகுமாா் தலைமையிலான போலீஸாா் கச்சேரிநடை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும் வகையில் அப்பகுதி வழியாக வந்த 3 மினி லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில், உரிய அனுமதி பெறாமல் பாறைப்பொடியை கேரளத்துக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் 3 மினி லாரிகளையும் பறிதல் செய்ததுடன், மினி லாரி ஓட்டுநா்களான கொல்லங்கோடு அருகே வெங்கஞ்சி அஜின் (26), கரையான்தோட்டம் பகுதியைச் சோ்ந்த அனந்து கிருஷ்ணன் (22), கேரள மாநிலம், பிலாமூட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த பிபின் (36) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதேபோல, களியக்காவிளை போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கேரளத்துக்கு உரிய அனுமதி இன்றி பாறைப்பொடி கடத்திச் செல்ல முயன்ற கனரக டிப்பா் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து கொல்லங்கோடு, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.