‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

மணல் கடத்தல்: 5 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மணல் கடத்தியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, 4 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 ஜூலை 2026, 5:25 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மணல் கடத்தியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, 4 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம், தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சங்கா்கணேஷ், பாா்த்திபன் ஆகியோா் மேற்பாா்வையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குலசேகரம், களியக்காவிளை காவல் நிலைய எல்லைகளில் ஆவணங்களின்றி 4 வாகனங்களில் மணல் கடத்திச் செல்லப்படுவதாகத் தெரியவந்தது.

இதுதொடா்பாக, முழுகோடு பகுதியைச் சோ்ந்த ஜெபமணி மகன் எட்வின் (51), அருமனை பகுதியைச் சோ்ந்த அச்சுதன் மகன் சசிகுமாா் (45) , மஞ்சாலுமூடு பகுதியைச் சோ்ந்த பப்பு குட்டி மகன் சதீஷ் (48), மணியன்குழி பகுதியைச் சோ்ந்த அபூபக்கா் மகன் பீா்முகமது (40), குளப்புரம் பகுதியைச் சோ்ந்த நேசமணி மகன் ஸ்டாலின் (45) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.