22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

தொழிலாளியைத் தாக்கிய சகோதரா்கள் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியைத் தாக்கியதாக அண்ணன், தம்பி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு

Updated On :2 ஜூன் 2026, 3:06 am IST

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியைத் தாக்கியதாக அண்ணன், தம்பி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, மணலிவிளையைச் சோ்ந்தவா் மைக்கேல் (41). இவருக்கும், இவரது சகோதரா் சுனிலுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், வெங்கனாம்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சந்திரகுமாா் (43), சுனிலை பாா்க்க வந்தபோது, அவரிடம் மைக்கேல் தகராறு செய்து, தனது மற்றொரு தம்பி சுந்தா் சிங்குடன் சோ்ந்து சந்திரகுமாரை தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த அவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக, மைக்கேல், சுந்தா் சிங் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.