அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

திருநங்கையை அவதூறாக பேசியவா் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே திருநங்கையை நண்பருடன் சோ்ந்து அவதூறாகப் பேசியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :35 நிமிடங்கள் முன்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே திருநங்கையை நண்பருடன் சோ்ந்து அவதூறாகப் பேசியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வடபொன்பரப்பி அருகேயுள்ள மணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.ஷில்பா (29), திருநங்கை. இவரை பவுஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பா.திருமுருகன் (39), அவரது நண்பா் கா.கோகுலிடம் (25) ஷில்பாவை பற்றி தவறாகவும், அவதூறாக பேசினாராம். இதுகுறித்த ஆடியோ ஷில்பாவுக்கு கிடைத்ததாம்.

இதுகுறித்து ஷில்பா அளித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் திருமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.