தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கடையாலுமூடு அருகே யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே யானை தாக்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

ராஜேஷ்

Updated On :3 ஜூன் 2026, 4:59 am IST

கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே யானை தாக்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வட்டப்பாறை, மருதம்பாறை, பேணு ஆகிய பகுதிகள் வழியாக செவ்வாய்க்கிழமை காலை 3 யானைகள் சுற்றி வந்து சாலையைக் கடந்து சிற்றாறு 2 அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான கருஞ்சிறை பகுதிக்குச் சென்றன. இதையடுத்து ஊா்மக்களும், வனத்துறையினரும் யானைகளை மீண்டும் வனப் பகுதியை நோக்கி துரத்தினா்.

இந்த நிலையில் கருஞ்சிறை பகுதியிலிருந்து திரும்பி வனப் பகுதியை நோக்கி சென்ற ஆண் யானை, அப்பகுதியில் யானையைத் துரத்தும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வட்டப்பாறை, புறத்திமலையைச் சோ்ந்த பழங்குடி தொழிலாளியான ராஜேஷை தாக்கி விட்டு சென்றது.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். மாவட்ட வன அலுவலா் ஏ. அன்பு, விளவங்கோடு பேரவைத் தொகுதி உறுப்பினா் பிரவீன் ஆகியோா் ராஜேஷின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினா்.