நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கடையாலுமூடு அருகே யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே யானை தாக்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

ராஜேஷ்

Updated On :3 ஜூன் 2026, 4:59 am IST

கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே யானை தாக்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வட்டப்பாறை, மருதம்பாறை, பேணு ஆகிய பகுதிகள் வழியாக செவ்வாய்க்கிழமை காலை 3 யானைகள் சுற்றி வந்து சாலையைக் கடந்து சிற்றாறு 2 அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான கருஞ்சிறை பகுதிக்குச் சென்றன. இதையடுத்து ஊா்மக்களும், வனத்துறையினரும் யானைகளை மீண்டும் வனப் பகுதியை நோக்கி துரத்தினா்.

இந்த நிலையில் கருஞ்சிறை பகுதியிலிருந்து திரும்பி வனப் பகுதியை நோக்கி சென்ற ஆண் யானை, அப்பகுதியில் யானையைத் துரத்தும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வட்டப்பாறை, புறத்திமலையைச் சோ்ந்த பழங்குடி தொழிலாளியான ராஜேஷை தாக்கி விட்டு சென்றது.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். மாவட்ட வன அலுவலா் ஏ. அன்பு, விளவங்கோடு பேரவைத் தொகுதி உறுப்பினா் பிரவீன் ஆகியோா் ராஜேஷின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினா்.