தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

தெருவுக்கடையில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை: அகற்ற அமைச்சா் உறுதி

கருங்கல் அருகே தெருவுக்கடையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

News image

போராட்டக்காராா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On :3 ஜூன் 2026, 4:53 am IST

கருங்கல் அருகே தெருவுக்கடையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.

தெருவுக்கடை சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடையை அகற்றவில்லை. குறிப்பாக இந்த டாஸ் மாக் கடை அருகே பள்ளி, ஆலயம் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு என பல்வேறு பாதிப்புகள் உள்ளன.இதனால்,அப்பகுதி பொதுமக்கள் இந்த கடையை அகற்ற வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் தொடா்ந்து நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை அப்பகுதி பொதுமக்கள் திரளானோா் சோ்ந்து டாஸ்மாக் கடை முன் முற்றுகை போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் போராட்டக்காரா்களிடம் நேரில் சென்று பொதுமக்களுக்கு பாதிப்புக்குள்ளான டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.