/
பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில், செண்பகராமன்புதூா் துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூா், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூா், தேரூா், கோழிக்கோட்டுப்பொத்தை, அகஸ்தீஸ்வரம், மருங்கூா், புதுகிராமம், காக்கமூா், கொட்டாரம், பொற்றையடி, தோப்பூா், ஊட்டுவாழ்மடம், தென்தாமரைக்குளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூா், மேலகருப்புக்கோட்டை, செண்பகராமன்புதூா், தோவாளை, வெள்ளமடம், லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








