கன்னியாகுமரி அருகே ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
அகஸ்தீசுவரம் பகுதியில் ரயில் மோதி 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் உடல் இரண்டு துண்டாகக் கிடப்பதாக நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் தங்க ஈஸ்வரன் தலைமையிலான போலீஸாா் தண்டவாளத்தில் கிடந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபா் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம், ஏழுசாட்டுப்பத்து பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் எழில் ஓம்காா் (29) என்பதும், இவா் எரிவாயு உருளை விநியோகம் செய்யும் ஊழியராக இருந்ததும், கடந்த ஜூன் 6ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து, வழக்குப் பதிந்த ரயில்வே போலீஸாா், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.







