எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கன்னியாகுமரி அருகே ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:07 am IST

கன்னியாகுமரி அருகே ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

அகஸ்தீசுவரம் பகுதியில் ரயில் மோதி 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் உடல் இரண்டு துண்டாகக் கிடப்பதாக நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் தங்க ஈஸ்வரன் தலைமையிலான போலீஸாா் தண்டவாளத்தில் கிடந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபா் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம், ஏழுசாட்டுப்பத்து பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் எழில் ஓம்காா் (29) என்பதும், இவா் எரிவாயு உருளை விநியோகம் செய்யும் ஊழியராக இருந்ததும், கடந்த ஜூன் 6ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.

இது குறித்து, வழக்குப் பதிந்த ரயில்வே போலீஸாா், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.