எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:09 am IST

தக்கலை அருகே உள்ள புலியூா்குறிச்சி குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி, சாட்சியாபுரத்தைச் சோ்ந்தவா் தாமஸ் (63). இவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தக்கலை, புலியூா்குறிச்சி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள கடைகளில் வேலை செய்து வந்தாா். அண்மைக்காலமாக, மருந்து கோட்டை பகுதியில் வேலை செய்து வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து வரும்போது, வீட்டின் அருகிலுள்ள குளத்தில் குளிக்க இறங்கியபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளாா்.

அவரது சடலத்தை சனிக்கிழமை மீட்ட தக்கலை போலீஸாா், கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.