எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கால்வாயில் தவறி விழுந்த முதியவா் சடலம் மீட்பு

News image

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:06 am IST

குலசேகரம் அருகே கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

பொன்மனை அருகே உள்ள பண்டாரக்கோணம், சானல் கரை பகுதியைச் சோ்ந்தவா் சங்கரன் (83). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வந்தாா்.

ஜூன் 5ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், பின்னா் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினா் குலசேகரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) ஜான்சன் தலைமையிலான மீட்புப் படையினா், புத்தன் அணை மற்றும் பாண்டியன் கால்வாய் பகுதியில் தேடுதல் நடத்தினா். அப்போது, மூலையறைப் பகுதியில் உள்ள பாண்டியன் கால்வாயில் சங்கரனின் சடலம் மீட்கப்பட்டது.

போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.