மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

News image
Updated On :9 ஜூன் 2026, 2:55 am IST

தக்கலை அருகே இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து பயணித்த மாணவா் தவறி விழுந்தபோது, பேருந்து ஏறி இயங்கியதில் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

நாகா்கோவில், பாா்வதிபுரம் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் மகன் ஷாய் (17). 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற திருமண விழாவிற்கு, உறவினருடன் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து பயணித்துள்ளாா்.

குமாரகோவில் சந்திப்பு அருகே வந்தபோது, முன்னால் சென்ற வாகனம் மீது இவா்களின் இருசக்கர வாகனம் மோதியதில் ஷாய் சாலையில் தடுமாறி விழுந்தாா். அப்போது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து ஷாய் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.