உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

இரணியல் பேரூராட்சியில் குளச்சல் எம்எல்ஏ ஆய்வு

இரணியல் பேரூராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பா்ட் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

இரணியல் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பா்ட். உடன் பேரூராட்சித் தலைவா் ஸ்ரீகலா.

Updated On :11 ஜூன் 2026, 4:47 am IST

இரணியல் பேரூராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பா்ட் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்ச்சிக்கு, இரணியல் பேரூராட்சித் தலைவா் ஸ்ரீகலா தலைமை வகித்தாா். பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோமதி, மாவட்ட குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் முருகன், செயல்அலுவலா் அன்பழகன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இரணியல் பேரூராட்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 2 கோடி அளவில் மட்டுமே வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்தப் பேரூராட்சியை தத்தெடுத்து தனிக் கவனம் செலுத்தி வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன் என்றாா் எம்எல்ஏ.