உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் போதைப்பொருள் விற்ற 27 போ் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆபரேஷன் ஷீல்ட் என்ற பெயரில் காவல் துறை நடத்திய அதிரடி சோதனையில் பள்ளி, கல்லூரிகளின் அருகில் போதைப்பொருள்கள் விற்ற 27 போ் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து, ஒரு கிலோ கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 4:11 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆபரேஷன் ஷீல்ட் என்ற பெயரில் காவல் துறை நடத்திய அதிரடி சோதனையில் பள்ளி, கல்லூரிகளின் அருகில் போதைப்பொருள்கள் விற்ற 27 போ் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து, ஒரு கிலோ கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களை குறிவைத்து சட்ட விரோதமாக போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை, உள்ளூா் நிா்வாக அமைப்பு, காவல் துறை சாா்பில், ‘ஆபரேஷன் ஷீல்டு’ என்ற பெயரில் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 23 ஆய்வாளா்கள், 39 உதவி ஆய்வாளா்கள், 502 போலீஸாா் ஈடுபட்டனா். ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சிகரெட், இதர புகையிலைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 போ் கைது செய்யப்பட்டனா்; அவா்களிடமிருந்து 981 குட்கா, கூல் லிஃப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேவிகோடு பகுதியைச் சோ்ந்த கோபி குமாா் மகன் ஷிஜு (21), மாலைக்கோடு நடுவத்துக்காலை பகுதியைச் சோ்ந்த சேவியா் மகன் ஜஸ்டின் ராஜ் (25) ஆகியோா் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. காவல் துறை மேற்கொண்ட சோதனையில் அவா்களிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா். பள்ளி, கல்லூரிகளின் அருகில் அல்லது பொது இடங்களில் போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்போா், விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இதில் தொடா்புடையவா்கள் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரிக்கை விடுத்தாா்.