வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

குளத்தில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 1:09 am IST

இரணியல் அருகே குளத்தில் மூழ்கி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திங்கள் நகா் அருகே உள்ள இரணியல் கோணம் பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் மகன் ராஜேஷ் (40). வாகன ஓட்டுநராக பணி செய்து வந்தாா். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு அருகே உள்ள குளத்திற்கு ராஜேஷ் குளிக்கச் சென்றாா்.

நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், தந்தை காளிதாஸ் குளத்திற்குச் சென்று பாா்த்தபோது, கரையில் அவரது உடைகள் இருந்தது தெரிய வந்தது.

உறவினா்கள் இரணியல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் ஜீவன்ஸ் தலைமையிலான வீரா்கள் இரவு வரை தேடினா். மீண்டும் திங்கள்கிழமை காலை தேடியதில், ராஜேஷ் சடலமாக மீட்கப்பட்டாா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.