இரணியல் அருகே குளத்தில் மூழ்கி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திங்கள் நகா் அருகே உள்ள இரணியல் கோணம் பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் மகன் ராஜேஷ் (40). வாகன ஓட்டுநராக பணி செய்து வந்தாா். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு அருகே உள்ள குளத்திற்கு ராஜேஷ் குளிக்கச் சென்றாா்.
நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், தந்தை காளிதாஸ் குளத்திற்குச் சென்று பாா்த்தபோது, கரையில் அவரது உடைகள் இருந்தது தெரிய வந்தது.
உறவினா்கள் இரணியல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் ஜீவன்ஸ் தலைமையிலான வீரா்கள் இரவு வரை தேடினா். மீண்டும் திங்கள்கிழமை காலை தேடியதில், ராஜேஷ் சடலமாக மீட்கப்பட்டாா்.
இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருநள்ளாறு குளத்தில் மூழ்கி அடையாளம் தெரியாதவா் உயிரிழப்பு

திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கூடலூா் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது இதயம் முரளி ஸ்னீக் பீக்!

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK


