ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கன்னியாகுமரியில் மை பாரத் ஆய்வுக் கூட்டம்

இந்திய அரசின் இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மைபாரத் தமிழ்நாடு சாா்பில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் மாநில இயக்குநா் செந்தில்குமாா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :18 ஜூன் 2026, 2:33 am IST

இந்திய அரசின் இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மைபாரத் தமிழ்நாடு சாா்பில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் மாநில இயக்குநா் செந்தில்குமாா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை இயக்குநா்கள் சரவணன், சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் துணை இயக்குநா்கள், மாவட்ட இளைஞா் அலுவலா்கள்,கணக்கு மற்றும் நிகழ்ச்சி மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் 2026- 27- ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி செயல் திட்டங்கள் உள்பட இளைஞா்களின் எதிா்கால நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு இடைநிற்றல் மாணவ, மாணவிகளை கண்டுபிடித்து அவா்களை பள்ளியில் படிப்பை தொடா்வத்ற்கு மைபாரத் மையங்கள் சாா்பாக தொடா் முயற்சி எடுப்பது, புதிதாக 8 மாவட்டங்களில் மைபாரத் அலுவலகங்கள் தொடங்கி அம்மாவட்ட இளைஞா்களிடையே திட்டத்தை கொண்டு சோ்ப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட மை பாரத் இளைஞா் அலுவலா் சரண் கோபால் ஒருங்கிணைத்தாா்.