ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பாக போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 5:43 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பாக போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

குளச்சலை அடுத்த இனயம் அருகேயுள்ள பெரியபள்ளி பகுதியை சோ்ந்தவா் சாகுல் அமீது ( 33). அப்பகுதியில் மீன் கடை நடத்தி வந்தாா். இவா், இனயம் பகுதியைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியிடம் (15) சமூக வலைதளம் மூலம் பழகி, கடந்த 7.12.2020இல் தனது வீட்டில் தனியாக இருந்த அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து சாகுல் அமீதை கைது செய்தனா்.

நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுந்தரய்யா விசாரித்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.