தொட்டியம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமி கடந்த 29.08.2022 இல் பள்ளிக்குச் சென்றபோது, தொட்டியம் பாலசமுத்திரம் மேலகாா்த்திகைப்பட்டி பாப்பாத்திபுரத்தைச் சோ்ந்த பெ. காா்த்திக் (24) என்பவா் முள்ளிப்பாடி விநாயகா் கோயில் அருகில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, வீட்டுக்கு அழைத்துச் சென்று கட்டாயத் தாலி கட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் முசிறி அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, காா்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி காா்த்திக்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 21 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.








