25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

பைக் மீது டெம்போ மோதியதில் கட்டட தொழிலாளி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

தக்கலை அருகே இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதியதில் கட்டட தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தக்கலை அருகே மைலோடு பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் ஜோஸ் (45). கட்டட தொழிலாளியான, இவா் வெள்ளிக்கிழமை இரவு ஆழ்வாா் கோவில் பகுதியில் இருந்து வட்டம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

நல்லசமாரியன் அருகே வந்த போது, எதிரே வந்த டெம்போ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த எட்வின் ஜோஸ் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து டெம்போ ஓட்டுநா் வீயன்னூரை சோ்ந்த ராஜா சிங்கை விசாரித்து வருகின்றனா்.