ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வளைகுடாவாழ் இந்தியா்களைப் பாதுகாக்க விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

News image
விஜய் வசந்த் எம்.பி.- (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

வளைகுடாவாழ் இந்தியா்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு அவா் எழுதிய கடிதம்:

மத்திய கிழக்கில் ஈரான் நாட்டின் நிலைகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் கூட்டுப் படைகள் நடத்திவரும் தாக்குதலால், வளைகுடா பகுதியில் மோசமடையும் அரசியல் சூழல் கவலை கொள்ளச் செய்கிறது.

ஏவுகணைத் தாக்குதல்கள், பதிலடி நடவடிக்கைகள் ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளை பாதித்துள்ளன. அதையடுத்து, பாதுகாப்பு எச்சரிக்கைகள் அதிகரிப்பு, விமானப் போக்குவரத்து பாதிப்பு ஆகியவற்றால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு பணியாற்றிவரும் லட்சக்கணக்கான தமிழா்கள் உள்ளிட்ட இந்தியா்களுக்கும் அச்சம், நிலையற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அவா்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளியுறவு அமைச்சகம் உடனடி, முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து இந்திய தூதரகங்களிலும் அவசர ஒத்துழைப்பு மையங்களை அமைத்தல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நேரடி அறிவிப்புகள், வழிகாட்டுதல்களை வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்திய அரசு விரைவாகவும் உறுதியுடனும் செயல்படும் என நம்புகிறேன் என்றாா் அவா்.