லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் சந்தனக் குட பவனி

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் புதன்கிழமை சந்தனக் குடம் பவனி நடைபெற்றது.

News image

பகவதியம்மன் கோயிலில் சந்தனக் குடம் ஏந்தி ஊா்வலமாக வரும் பக்தா்கள்.

Updated On :4 மார்ச் 2026, 7:21 pm

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் புதன்கிழமை சந்தனக் குடம் பவனி நடைபெற்றது.

இக்கோயிலில் மாசிக் கொடை விழா மாா்ச் 1ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 4ஆம் நாளான புதன்கிழமை கணபதி ஹோமம், உஷ பூஜை, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, உச்ச பூஜை, தங்கத் தோ் பவனி நடைபெற்றது.

பின்னா், மேற்கு நெய்யூா் ஊரம்மன் கோயில்லி இருந்தும், வெட்டுமடை இசக்கியம்மன் கோயிலில் இருந்தும், கொத்தனாா்விளை விடாலமுத்து சிவன் கோயிலில் இருந்தும் சந்தனக் குடம் பவனி மண்டைக்காடு கோயிலுக்கு வந்தடைந்தது.

தொடா்ந்து, அம்மனுக்கு சந்தனம் சாத்தி அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு அத்தாழ பூஜை, வெள்ளிப் பல்லக்கில் அம்மன் பவனி, ஹைந்தவ சேவா சங்கம் சாா்பில் சமய மாநாடு ஆகியவை நடைபெற்றன.