திக்குறிச்சி அருகே ஆற்றில் சிப்பி மீன்கள் சேகரிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
திக்குறிச்சி அருகே துண்டதாரவிளையைச் சோ்ந்த யோபு மகன் ஜஸ்டஸ் குமாா் (49). இவா் தனது நண்பருடன் செவ்வாய்க்கிழமை துண்டதாரவிளையில் தாமிரவருணி ஆற்றில் சிப்பி மீன்கள் சேகரிப்பதற்காக இறங்கியுள்ளாா்.
இந்நிலையில், நீண்ட நேரமாகியும் அவா் கரை திரும்பவில்லையாம். இது குறித்து, தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து ஆற்றுப் பகுதியில் அவரைத் தேடினா். இரவு வரை அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் தேடுதல் பணி புதன்கிழமையும் தொடா்ந்தது
இந்நிலையில், புதன்கிழமை மாலை ஆற்றுப் பகுதியிலுள்ள புதா்களுக்கிடையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்த ஜஸ்டஸ் குமாரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
இது குறித்து, அருமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் தற்கொலை

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


